கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 13 பிப்ரவரி, 2012

குற்றாலம் அருகே லாரி மோதி விவசாயி பலி

குற்றாலம் அருகே லாரி மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். குற்றாலம் போலீஸ் சரகம் இலஞ்சி ரயில்வே கேட் ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாசலதேவர் மகன் சீனித்தேவர் (75) ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். 


அப்போது மதுரையிலிருந்து கேரளா நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சீனித்தேவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து குற்றாலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக