கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

பெரிய மனம் வேண்டும்


வேலூர் மாவட்டம் துரைப்பாடியைச் சேர்ந்தவர் பூபாலன் (54). இவர் மாதவரம் பைபாஸ் சாலையில் உள்ள ஜனதா டிரான்ஸ்போர்ட் என்ற லாரி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.   சரக்கு அனுப்பிய வகையில் பல்வேறு இடங்களில் பணம் வசூலிப்பது இவரது பணி ஆகும்.
 

நேற்று சென்னையில் பணம் வசூலித்துவிட்டு ரூ.1 லட்சம் பணத்துடன் மாதவரம் செல்வதற்காக இன்று காலை 5.15 மணிக்கு பாரிமுனையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 557 மாநகர பஸ்சில் ஏறினார். பணத்தை ஒரு ரெக்சின் பையில் வைத்து இருந்தார். பஸ் புறப்பட்டதும் பூபாலன் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது பணப்பை தவறி இருக்கைக்கு அடியில் விழுந்தது. இதை பூபாலன் கவனிக்கவில்லை.
 
மாதவரம் பஸ்நிறுத்தம் வந்ததும் அவசரமாக இறங்கி சென்றுவிட்டார். பின்னர் பஸ் பல நிறுத்தங்களில் நின்று கும்மிடிப்பூண்டி சென்று விட்டு மீண்டும் பாரி முனைக்கு புறப்பட்டது.   அப்போது பஸ்சில் பை ஒன்று அனாதையாக கிடப்பதை கண்டக்டர் மோகன்குமார், டிரைவர் சங்கர் ஆகியோர் பார்த்தனர்.
 
பையை திறந்து பார்த்தபோது அதில் கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லாரி ஆபீஸ் ரசீதுகளும் இருந்தது. அதில் இருந்த போன் நம்பரை வைத்து லாரி ஆபீசுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். பின்னர் பணப்பையை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ.1 லட்சத்து 600 இருந்தது. இதற்கிடையே பணத்தை தவறவிட்ட பூபாலனும் போலீஸ் நிலையம் வந்தார். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் விசாரணை நடத்தி அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக