கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 பிப்ரவரி, 2012

இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் : மன்மோகன் சிங்

தேசிய உற்பத்தி கொள்கை மூலம் இந்தியாவில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று தொடங்கிய மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை கூறினார். தேசிய உற்பத்தி கொள்கை மூலம் உள்நாட்டு மொத்த உற்பத்தியை 25 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதனை மாநில அரசுகளோடு இணைந்து செயல்படுத்த மத்திய அரசு உறுதிப் பூண்டுள்ளதாக பிரதமர் கூறினார். கடந்த ஓராண்டாக உள்நாட்டு பாதுகாப்பு நிலையாக இருந்தாலும், தீவிரவாதம் உள்பட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்ற தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக