கேரளாவில் கட்டட பணியில் ஈடுபட்ட போது கீழே விழுந்த நெல்லை தொழிலாளி இறந்தார்.மேல கடையநல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(32). கட்டடத்தொழிலாளி. சம்பவத்தன்று கேரளாவில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது சங்கர் கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று சங்கர் இறந்தார்.இதுகுறித்து அஞ்சல் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக