கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம்




தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இதற்காக சென்னையில் 1126 போலியோ சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 16 வருடங்களாக அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டும் 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் 19.2.2012 அன்றும் இரண்டாவது தவணை 15.4.2012 அன்றும் நடைபெறவுள்ளது.

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 19.2.2012 அன்று சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஐந்தரை இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  போலியோ நோயை அடியோடு ஒழிக்க வேண்டுமானால், பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும்.  உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டுமருந்து மையத்திற்குச் சென்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளப்பட வேண்டும்.  சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும்.  எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது.  


குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 19.2.2012 அன்று நடைபெறும் முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.  முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டுமருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டுமருந்தும் மாற்று மருந்து அல்ல.  இது ஒரு கூடுதல் தவணையாகும்.


போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி  இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக