கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வரவேண்டும் TNTJ

வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது. பாளை. யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகரக்கிளை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவை ரகுமத்துல்லா பேசினார்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவது, தமிழகத்தில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது, இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவது, மின்வெட்டை குறைப்பது, சங்கரன்கோவில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசை வலியுறுத்துவது, வரதட்சணை இன்றி திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் முன்வர வலியுறுத்துவது, வரதட்சணை இல்லாத திருமணத்தை மட்டும் நடத்த ஜமாத்தார்களை வலியுறுத்துவது, பள்ளி, கல்லூரிகள் அருகே ஒட்டப்படும் சினிமா, ஆபாச போஸ்டர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக