கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 23 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்



சங்கரன்கோவில் தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
 
ரெயில்வே பீடர் சாலை, போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்த கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. மேலும் பீடங்களை துணியாலோ அல்லது வேறு பொருட்களாலோ மறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சுகாதார அலுவலர் குருசாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்பால் மூர்த்தி, வெங்கடேஸ்வரன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இக்கொடி கம்பங்களை அகற்றினர். காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சுதா, ராஜகோபால் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக