கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியில் தமிழக பைஜிகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் ஹசனுதீன் தலைமை வகித்தார். பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் ஹாஜாமுகைதீன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட அரசு ஹாஜி முகைதீன், கூத்தாநல்லூர் அகமதுமீரான், சாப்டூர் பிஸ்மில்லாஹான், கடையநல்லூர் முகம்மதுகனி, புளியங்குடி நாகூர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்துகொண்டனர். முகமதுமைதீன் வரவேற்றார். பேரவைப் பொருளாளர் முகம்மதுஇக்பால் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக