கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 2 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் பகுதியில் குடியரசு தினவிழா

கடையநல்லூர் ரத்னா கல்வி நிறுவனத்தில் 63வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளியின் நிறுவனர் ரத்னா பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் தீயணைப்புத்துறை உயர் அதிகாரி மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். ரத்னா ஆங்கிலப்பள்ளி செயலர் ஆறுமுகம், உயர்நிலைப்பள்ளி செயலர் மாடசாமி, தலைமை ஆசிரியை சக்திவடிவு பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ரத்னா ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியை தங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.* பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பாபநாசம் பணிமனையில் பணிமனை மேலாளர் அருணாச்சலம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

அண்ணா மத்திய தொழிற்சங்க துணைத் தலைவர் ஆல்பர்ட் ஜேசு அலங்காரம், சண்முகவேல் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.* இலத்தூர் பஞ்.,சில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பஞ்., தலைவர் பரமசிவன் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார். பஞ்.,துணைத் தலைவர் ரமேஷ், பஞ்., உறுப்பினர்கள் கிருஷ்ணன், சேசன், சாப்பாணி, பொற்கலை, சிதம்பரம், திருமலைக்குமார், செல்வம், சுப்புலட்சுமி, பஞ்., பணியாளர்கள், பஞ்., செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* சீவநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு செங்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் கிறிஸ்டினா ரோஜாத்தி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து இறைவணக்கம், கொடிப்பாடல் பாடினர். பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சீவநல்லூர் பஞ்., தலைவர் சட்டநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆக்னஸ்மேரி வரவேற்றார். பேச்சு, கட்டுரை, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பஞ்., தலைவர் பரிசுகள் வழங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.* குற்றாலம் செய்யது பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல்காதர் வரவேற்றார். செங்கோட்டை ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வருசைக்கனி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநில அளவில் முதலிடம் பெற்ற இளம் விஞ்ஞானி முகமது பைசல், குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற முகமது உபைஸ் அன்வாஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜான்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஷமீனா தொகுத்து வழங்கினார். விழாவில் கல்வி ஆலோசகர் முகமது இஸ்மாயில், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக