கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 2 பிப்ரவரி, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்

நெல்லையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14ம்தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லையில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதையொட்டி மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் யூசுப்அலி, செயலாளர் செய்யதுஅலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முகமதுமைதீன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்சாரி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.14ம்தேதி ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்வது, இதுதொடர்பாக பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம், சைக்கிள் பேரணி, விளம்பரம், துண்டுப்பிரசுர பிரசாரம் செய்வது, மேலப்பாளையம் பஜார் திடலில் 4ம்தேதி விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக