கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் நோய் தாக்கிய இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்' இந்து முன்னணி


"கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நோய் தாக்கிய ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்' இந்து முன்னணி சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ஏற்கனவே இறந்து போன ஆட்டினை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த சம்பவம் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இறந்துபோன ஆடு, மாடு, கோழி போன்றவற்றினை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. இது தொடர்பான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்திய நிலையில் சில பகுதிகளில் நோய்கள் தாக்கிய ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா நகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நகராட்சி பகுதிகளில் நோய் தாக்கிய கோழி, ஆடு மற்றும் மாடுகளை இறைச்சியாக விற்பதால் நோய்பரவும் அபாயம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் மர்ம காய்ச்சல் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி பகுதியில் நோய் தாக்கிய ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகள் விற்பனை செய்வதை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், கழிவுகளை ஆற்றுப்படுகை மற்றும் கால்வாய்களிலும் கொட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக