கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் SDPI சார்பில் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது


கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

மக்களிடம் பெருகிவரும் சுகாதாரமின்மை மற்றும் சுகாதார குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கடந்த 10ம் தேதி முதல் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற தலைப்பில் பல்வேறு ஆரோக்கியம் பற்றிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், யோகா போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை இம்முகாம்களில் நடத்தி வருவதுடன் சுகாதார தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் தெருக்கள் மற்றும் சாலையோரங்களை சுத்தமாக வைத்திருக்க கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மேற்கு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜாமுகைதீன் ஆலிம் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைப்பின் சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக