கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நெல்லை அருகே இரு வெவ்வேறு இடங்களில் ரோடு விபத்து


நெல்லை அருகே இரு வெவ்வேறு இடங்களில் ரோடு விபத்துக்களில் உ.பி., முதியவர், வாலிபர் இறந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் கன்னியாகுமரி நோக்கி சுற்றுலா சென்றனர். சுற்றுலாக்குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு நெல்லை அருகே பேரின்பபுரம் விலக்கு ரோட்டில் பஸ்சை நிறுத்தினர். அப்போது ரோட்டை கடக்க முயன்ற தனகடம்பூர் கத்தாயி க்ரகாம் பகுதியை சேர்ந்த கைலாஷ்நாத் சுக்லால்(65) மீது ஒரு வாகனம் மோதியது. படுகாயமடைந்த கைலாஷ்நாத் சுக்லாலை உடன் இருந்தவர்கள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் இறந்தார்.

வாலிபர் பலி : நெல்லை அருகே பாலாமடை தெற்குத்தெருவை சேர்ந்த சிவசுப்பு மகன் ஆறுமுகராஜ்(23). சென்ட்ரிங் தொழிலாளி. இவரும், வல்லவன்கோட்டையை சேர்ந்த ஆறுமுகமும் சம்பவத்தன்று மோட்டார்பைக்கில் ராமச்சந்திரபுரம் பஸ்ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தனர். ஆறுமுகம் பைக்கை ஓட்டினார். பைக் திருப்பத்தில் சென்ற போது இருவரும் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இருவரும் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று ஆறுமுகராஜ் இறந்தார். விபத்து குறித்து சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் விசாரணை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக