கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 5 ஜனவரி, 2012

கடையநல்லூர், செங்கோட்டையில் டாக்டர்கள் ஸ்டிரைக்

கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை சம்பவத்தை அடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம், குற்றாலம், சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் தமிழ்நாடு கிளை அமைப்பின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் டாக்டர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கிடவும், ஆஸ்பத்திரிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக செயல்பட ஆணை வழங்கிடவும், தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேற்று கடையநல்லூரில் பெருமளவில் இயங்கவில்லை.

நேற்று காலையிலிருந்தே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள்இயங்காததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோன்ற நிலை செங்கோட்டை பகுதியிலும் காணப்பட்டது.இந்திய மருத்துவ சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று செங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிகளும் செயல்படவில்லை. டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால்பெரும் பாதிப்பு காணப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகள் அவதிப்படக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக