தமிழகம் முழுவதும் இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் வாரிய அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள்(எல்டி.,நுகர்வோர்) மின் கட்டணங்களை இணைய தளம் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் www.tnebnet.org என்ற இணைய தள முகவரியில் மின் கட்டணங்களை செலுத்தி பயன் பெறலாம்.இவ்வாறு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் வாரிய அலுவலகத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள்(எல்டி.,நுகர்வோர்) மின் கட்டணங்களை இணைய தளம் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் www.tnebnet.org என்ற இணைய தள முகவரியில் மின் கட்டணங்களை செலுத்தி பயன் பெறலாம்.இவ்வாறு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக