கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஜனவரி, 2012

பைக்-ஆட்டோ மோதல் கட்டட தொழிலாளி பலி

தென்காசியில் பைக் மீது ஆட்டோ மோதியதில் கட்டட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.தென்காசி செங்கோட்டை ரோடு வாலிபன் பொத்தையை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி (27). கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் ஆய்க்குடியில் இருந்து தென்காசி வந்து கொண்டிருந்தார். ஆளில்லாத ரயில்வே கிராசிங் அருகே வந்த போது எதிரே வந்த ஆட்டோ திடீரென பைக் மீது மோதியது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த மைக்கேல் அந்தோணி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி அகரக்கட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேவியர் ஆரோக்கியசாமி (27) என்பவரை கைது செய்தார். விபத்தில் பலியான மைக்கேல் அந்தோணிக்கு விண்ணரசி (25) என்ற மனைவியும், அந்தோணி ராகுல் (5) என்ற மகனும், அன்சிலின்மேகா (3) என்ற மகளும் உள்ளனர்.தென்காசி-ஆய்க்குடி ரோட்டில் இரவு நேரம் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த ரோடு அதிகமான வளைவுகளை கொண்டதாகவும், குறுகலானதாகவும் இருப்பதால் விபத்து நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ரோட்டை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக