கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் கூடுதல் ரெயில் பெட்டிகள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
சென்னைஎழும்பூர்- திருச்செந்தூர், திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸில்(ரெயில் எண்-16735,16736) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூங்கும்வசதி கொண்ட 4பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நேற்று(13-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை 4கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
 
அதேபோல் திருச்செந்தூரில் இருந்து இந்தரெயிலில் இன்று (14-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை 4பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும். நெல்லை-பிலாஸ்பூர் வாராந்திரரெயிலில் 2தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு திரீ டயர் குளிர்சாதனபெட்டி இணைக்கப்படும்.
 
நெல்லையில் இருந்து வருகிற 29-ந்தேதி கூடுதல்பெட்டிகளுடன் இந்த ரெயில் புறப்பட்டு செல்லும். பிலாஸ்பூரில் வருகிற 31-ந்தேதி புறப்படும்போது கூடுதல்பெட்டி இணைப்பு இருக்கும். அதேபோல் நெல்லை-ஹபா வாராந்திர ரெயிலிலும் தூங்கும்வசதி கொண்ட ஒருபெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக