கடையநல்லூரில் இறகுபந்து போட்டி நடந்தது.புளியங்குடி ரோட்டரி சங்கம், புளியங்குடி இறகுபந்து ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து நடத்திய இறகு பந்து போட்டி கடையநல்லூர் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. புளியங்குடி வர்த்தக சங்க தலைவர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். இறகுபந்து விளையாட்டு போட்டியை ரோட்டரி சங்க துணை கவர்னர் பாலாஜி கிரானைட்ஸ் சங்கரநாராயணன் துவக்கி வைத்தார்.போட்டியில் முதல் பரிசுகளை கண்ணன், சுரேஷ் ஆகியோரும், இரண்டாம் பரிசுகளை அபுசாலி, கண்ணன் ஆகியோரும் பெற்றனர். 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான இறகுபந்து போட்டியில் முதல் பரிசை காஜாமுகைதீன், எஸ்.டி.ஏ.பள்ளி சுரேஷ் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் புளியங்குடி ரோட்டரி சங்க தலைவர் முருகையா, செயலாளர் பிச்சையா, வேளாண்மை உதவி இயக்குனர் முருகானந்தம், டி.டி.சாமி மற்றும் கடையநல்லூர், புளியங்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக