கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 350 பேருக்கு தமிழக அரசின் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
கடையநல்லூர் நகர அதிமுக செயலர் கிட்டுராஜா தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலர் முத்துப்பாண்டி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ஆயிஷாள்பீவி வரவேற்றார்.
ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பெரியதுரை 350 மாணவர்களுக்கு தமிழக அரசின் ஊக்கத் தொகைக்கான பத்திரத்தின் நகலை வழங்கினார்.
இதில் அதிமுக மாணவரணிச் செயலர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதி பெருமையாப்பாண்டியன், நகர அவைத்தலைவர் கருப்பையா, பொருளாளர் மாரியப்பன், ஆசிரியர்கள் கண்ணன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம் தொகுத்து வழங்கினார். மோசஸ்தர்மா நன்றி கூறினார்.
கடையநல்லூர் நகர அதிமுக செயலர் கிட்டுராஜா தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலர் முத்துப்பாண்டி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ஆயிஷாள்பீவி வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக