கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தென்காசியில்தீ விபத்து


தென்காசியில் குப்பை மேட்டில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி ரயில்வே ரோட்டில் சீவலப்பேரி குளத்தின் கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாடி கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தில் புதிதாக ஜூவல்லர்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இக்கட்டடத்தின் அருகில் குளத்து பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு திடீரென இந்த குப்பை மேட்டில் தீ பிடித்து. நேரம் செல்ல செல்ல குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக