கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 7 ஜனவரி, 2012

கடையநல்லூரில் முப்பெரும் விழா


கடையநல்லூரில் முப்பெரும் விழா நடந்தது.கடையநல்லூரில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற கல்வி அறக்கட்டளை துவக்க விழா, பிரமநாயகம் நினைவு நூலக துவக்க விழா, கவுன்சிலருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு வேலு தலைமை வகித்தார். பெரியசாமி, பட்டமுத்து, ஜெயபால் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி நற்பணி மன்றத்தை முத்தையா திறந்து வைத்தார். பிரமநாயகம் நினைவு நூலகத்தை டாக்டர் சிவராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி படத்தை முத்தையா செட்டியார் திறந்து வைத்தார். கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி, பூமாரி ஆகியோருக்கு நடராஜன் நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் முருகன், புலவர் ராஜகோபாலன், சரவணன், சிவசுப்பையா, சக்திவேல், சந்திரசேகரன், வேலு, கருப்பசாமி, கிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை மன்ற காப்பாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். வள்ளிநாயகம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக