கடையநல்லூர் யூனியனில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 107 வீடுகள் கட்டப்படவுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 427 பசுமை வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடையநல்லூர் யூனியனில் 107 பசுமை வீடுகள் கட்டப்படவுள்ளன. ஆனைகுளத்தில் 5 வீடுகளும், போகநல்லூர் 7, சொக்கம்பட்டி 9, இடைகால் 4, கம்பனேரி 6, காசிதர்மம் 6, கொடிக்குறிச்சி 7, குலையநேரி 7, நயினாரகரம் 10, நெடுவயல் 7, பொய்கை 11, புதுக்குடி 5, புன்னையாபுரம் 7, திரிகூடபுரம் 7, ஊர்மேலழகியான் 5, வேலாயுதபுரம் 4 ஆக மொத்தம் 107 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கடையநல்லூர் யூனியனில் 51 வீடுகள் பஞ்., பகுதிகளில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யூனியன் பிடிஓ பழனி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக