கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

புளியங்குடி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது


புளியங்குடி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி அருகேயுள்ள அய்யாபுரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை காய்ச்சி வைத்திருப்பதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அய்யாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இப்பகுதியை சேர்ந்த சந்திரன் (48), ஆனந்தராஜ் (19), கணேசன் (26) ஆகியோர் தடை செய்யப்பட்ட கள்ளசாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து சாராயம் காய்ச்சிட பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக