கடையநல்லூர் தொகுதி இடைகால் பஞ்.,சில் தமிழக அரசின் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இன்று (21ம் தேதி) வழங்குகிறார்.அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடையநல்லூர் தொகுதியில் கம்பனேரி பஞ்.,சில் திட்ட துவக்க விழா நடந்தது.
அதனை தொடர்ந்து இடைகால் பஞ்.,சில் சுமார் 950 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா இன்று (21ம் தேதி) நடக்கிறது.பயனாளிகளுக்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வழங்குகிறார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை இடைகால் பஞ்.,தலைவர் செல்லப்பா, துணைத் தலைவர் திருமலைக்குமார், பஞ்., கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர் முருகையா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இடைகால் பஞ்.,சில் சுமார் 950 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா இன்று (21ம் தேதி) நடக்கிறது.பயனாளிகளுக்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வழங்குகிறார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை இடைகால் பஞ்.,தலைவர் செல்லப்பா, துணைத் தலைவர் திருமலைக்குமார், பஞ்., கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர் முருகையா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக