கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 4 ஜனவரி, 2012

பேட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்

பேட்டை முகமதுநயினார் பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.பள்ளிவாசல் அரங்கில் மாவட்ட வக்பு போர்டு அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. 9 இடங்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.ஜமாத் தலைவராக நூர்முகமது, செயலாளராக அப்துல்காதர், பொருளாளராக அமானுதீன், கமிட்டி உறுப்பினர்களாக அப்துல்லா, சுபியான், பக்கீர்மைதீன், சிக்கந்தர், கலீல்முகமது இஸ்மாயில், பீர்மைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக