கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்றத் தலைவி சைபுன்னிஷா தேசியக் கொடியேற்றினார். இதில் துணைத் தலைவர் ராசையா, ஆணையர் அப்துல் லத்தீப்,பொறியாளர் ராமலிங்கம், துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம்,பிச்சையாபாஸ்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணாபுரம் ஹரிணி வித்யாலயா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார். இதில் தாளாளர் இசக்கிலால்சிங்,செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக