கடையநல்லூர் ரத்னா நர்சரி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது. கடையநல்லூர் நகரில் முதன்முறையாக ரத்னா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் உலகெங்கும் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது. பள்ளி செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ரத்னா பிரகாஷ் கம்ப்யூட்டர் கல்வியின் பயன்பாடு மற்றும் சிறப்பு குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக