கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 28 ஜனவரி, 2012

கடையநல்லூரில் அ.தி.மு.க.,வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கடையநல்லூரில் நடந்தது.கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் யாத்ரா பழனி, சசிகுமார், செங்கோட்டை ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், திருப்பதி, முத்துராமன், அய்யாசாமி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். 


கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ் தொகுப்புரையாற்றினார்.கூட்டத்தில் அதிமுக தலைமை பேச்சாளர்கள் கோவை புரட்சிதம்பி, நயினாமுகம்மது, முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., நயினாமுகம்மது, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், கடையநல்லூர் தொகுதி இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகராட்சி தலைவர் மோகனகிருஷ்ணன், கடையநல்லூர் யூனியன் தலைவி பானுமதி, துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை. செங்கோட்டை யூனியன் துணை தலைவர் வக்கீல் ஆதிபாலசுப்பிரமணியன், டவுன் பஞ்.,தலைவர்கள் அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், சாம்பவர்வடகரை செல்வி, இலஞ்சி காத்தவராயன், ஆய்க்குடி குட்டியம்மாள், பேரூர் செயலாளர்கள் காந்திபாண்டியன், பரமசிவன், முத்துக்குட்டி, அலியார், கடையநல்லூர் நகர அவைத்தலைவர் கருப்பையா, நகர பொருளாளர் மாரியப்பன், கவுன்சிலர்கள் முத்தையாபாண்டி, மாரிமுத்து, கணபதிதேவர், முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பேரவை இணை செயலாளர் வடகரை ரஜப் முகம்மது, பஞ்.,தலைவர்கள் செல்லப்பா, டெய்சிராணி, மூக்கையா, மாவட்ட பிரதிநிதி சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக