முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கிற்கு சிலை வைக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அஜண்டாவில் இடம்பெறாததால் அதிமுக கவுன்சிலர்கள் நேற்று கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கடையநல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று தலைவர் சைபுன்னிசா தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, துணைத் தலைவர் ராசையா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சீவலங்கால், சாலாப்பேரி ஆகிய ஓடைகள் தூர் செய்யப்பட்டதற்கான செலவினம் குறித்த பொருள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அப்துல் லத்தீப் : போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்ட பணிகள் என்றாலும் நடந்து முடிந்த பிறகு இதற்கான செலவு ஒப்புகை சீட்டு ஏன் வைக்கப்படவில்லை.
கணபதி : சீவலங்கால் ஓடையில் ஒரு பிட் கூட மண் அள்ளிப்போடவில்லை. பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் அந்த பகுதியில் காணப்படாத நிலையில் இந்த செலவினத்தை எப்படி அனுமதிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக