கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடையநல்லூரில் இன்று முதல் மின்தடை நேரம் மாற்றியமைப்பு

கடையநல்லூர் மின் கோட்டத்துக்குள்பட்ட கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, நாரணபுரம், விஸ்வநாதப்பேரி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின்விநியோகம் பெறும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) முதல் புதிய மின் தடை நேரம் அமல் செய்யப்படுகிறது.
 இது தொடர்பாக கடையநல்லூர் கோட்டச் செயற்பொறியாளர் ஜே.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


 கடையநல்லூர் துணை மின் நிலையம்: கடையநல்லூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகரம் 1, 2 பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும். கடையநல்லூர் புறநகர் பகுதியில் காலை 10 முதல் நண்பகல் 12 வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நயினாரகரம் ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்


 புளியங்குடி துணை மின் நிலையம்: புளியங்குடி ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை ஏற்படும். சொக்கம்பட்டி ஃபீடரில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 வீரசிகாமணி துணை மின் நிலையம்: சேர்ந்தமரம் ஃபீடரில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஊத்தான்குளம் ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வலசை ஃபீடரில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 நாரணபுரம் துணை மின் நிலையம்: சிந்தாமணி ஃபீடரில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் மாலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நெல்கட்டும்செவல் ஃபீடருக்குள்பட்ட பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 3 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ராயகிரி ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையம்: சிவகிரி ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். வழிவழிகுளம் ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் மாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். விஸ்வநாதப்பேரி ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தேவிப்பட்டணம் ஃபீடரில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக