கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 31 டிசம்பர், 2011

16,549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமனம் பாளை.,யில் 2,800 பேருக்கு 3ம் தேதி "இன்டர்வியூ' ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் 395 பணியிடங்களுக்கு 2,800 பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பாளை.,யில் வரும் 3ம் தேதி முதல் "இன்டர்வியூ' ஆரம்பமாகிறது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர், தோட்டக்கலை, ஓவியம் உட்பட பல்வேறு தொழில் கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரிய பணியிடங்களை மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அனைத்து வட்டார வள மையங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை பெற்று அனைத்து மாவட்டங்களிலும் தகுதியானவர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இன சுழற்சி சீனியாரிட்டி பட்டியலும் பெறப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம்:

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொததம் 395 காலி ஆசிரிய பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கு சுமர் 2,800 பேர் விண்ணப்பங்களை அளித்தனர்.இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இவர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.தினமும் 300 பேருக்கு சான்றிதழ் சரி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற்கல்வி நிபுணர், மாவட்ட அளவில் அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப இசை, கம்ப்யூட்டர், தோட்டக்கலை படிப்புகளில் நிபுணர்கள் நேர்முகத் தேர்வை நடத்துகின்றனர்.தொடர்ந்து நேர்முகத் தேர்வு முடிவுகள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் 16ம் தேதி முதல் இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக