கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 டிசம்பர், 2011

கடையநல்லூர் அருகே சாலையை மறைக்கும் மரங்களால் வாகனஓட்டிகள் அவதி

கடையநல்லூர் அருகேயுள்ள மங்களாபுரம் வளைவுப் பகுதியில் சாலையை மறைக்கும் வகையில் உள்ள மரங்களால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.


  கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகேயுள்ள மங்களாபுரம் வளைவுப் பகுதியில் வரிசையாக மரங்கள் உள்ளன. இவை சாலையை மறைப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


  முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாக இச் சாலையை பயன்படுத்தி கேரளத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள், கனரக வாகனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
  எனவே, இந்த வளைவுப் பகுதியிலுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அறிவிப்பு பலகை:  இந்த வளைவுப் பகுதியில் அபாய வளைவு என்ற அறிவிப்பு பலகையை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக