கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் முல்லை பெரியாறு உரிமை போர் மற்றும் சாலை முற்றுகை போர் நேற்று செங்கோட்டை வனச்சரகர் டோல்கேட் அருகே நடந்தது. மதிமுக கொள்ளை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் பெருமாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தை வலியுறுத்தி முன்னாள் எம்.பி. சிப்பிபாறை ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் டாக்டர்.சதன்திருமலைக்குமார், குட்டி (எ) சண்முகசிதம்பரம் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தை அடுத்து செங்கோட்டை-கொல்லம், செங்கோட்டை-திருமலைக்கோவில், செங்கோட்டை-கடையநல்லூர் உள்ளிட்ட வழிதடங்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. சாலை மறியல் போராட்டத்தை வலியுறுத்தி பகுதி பகுதியாக சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 1357 கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலைமறியல் போராட்டத்தை அடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட எஸ்.பி. விஜேயேந்திர பிதரி உத்தரவின்படி டி.எஸ்.பி.,கள் பாண்டியராஜன், ஜமீம் மற்றும் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக