கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 18 மார்ச், 2012

தஞ்சையில் பிறந்த சில மணி நேரத்தில் ரோட்டில் வீசப்பட்ட பெண் குழந்தை. தாயை போலீஸ் தேடுகிறது


தஞ்சை மேம்பாலம் அருகே வேன் ஸ்டாண்டு பக்கம் உள்ள ரோட்டில் இன்று காலை 6.30 மணிக்கு ஓரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்ளவர்கள் அருகில் போய் பார்த்தனர். 
அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன ஓரு பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடல் துணியால் மூடப்பட்டு கிடந்தது. பின்னர் குழந்தையின் தாயை அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் காணவில்லை. 
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் அந்த குழந்தையை தஞ்சை ராஜா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
தஞ்சையில் பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை ரோட்டில் வீச்சு: தாயை போலீஸ் தேடுகிறது
இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த பெண் குழந்தையை ரோட்டில் வீசிவிட்டு சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் ரோட்டில் வீசப்பட்டதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இச்சம்பவம் தஞ்சையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக