கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 12 மார்ச், 2012

அமைச்சர் முஹம்மதுஜானுக்கு புளியங்குடியில் வரவேற்பு

புளியங்குடி வருகை தந்த தமிழக அமைச்சர் முஹம்மதுஜானுக்கு ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.புளியங்குடி வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மதுஜானுக்கு மீராஷா ஆண்டவர் மேலபள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் நினைவு துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜமாத் கமிட்டி தலைவர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல்ரகுமான், துணை செயலாளர் முகமதுபாவா, கல்விக் கமிட்டி தலைவர் நாகூர்மைதீன், உறுப்பினர்கள் அப்துல்ரகீம், முகமது ஹனிபா, முகமது, அலியார் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி செயலாளர் மைதீன்பிச்சை வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, குமரி தமிழ்மகன்உசேன், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ துரையப்பா, புளியங்குடி நகராட்சி தலைவர் சங்கரபாண்டியன், பேராசிரியர் பீர்முகமது உள்ளிட்ட பலர் பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் காதர்மைதீன், மாவட்ட துணை செயலாளர் லியாகத்அலி, சங்கரன்கோவில் முகமதுஷா, பள்ளி தலைமையாசிரியர் சஹர்பானு, அதிமுக அவைத்தலைவர் முகமதுஉசேன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல்ஹமீது, முகைதீன், மணிச்சுடர் சாகுல்ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பள்ளி உதவி தலைமையாசிரியர் காதர்மைதீன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக