கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 1 மார்ச், 2012

தமிழகத்தில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழகத்தில் 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் மே மாதம் 27ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்து தேர்வு அடிப்படையில் விரைவில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு வரும் மே மாதம் 27ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயாகும். தேர்வு கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 250 ரூபாய் தேர்வு கட்டணமாகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளின் செலான் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
இதில் தமிழ் பாடத்திற்கு 601 பேரும், ஆங்கிலம் 349, கணிதம் 315, இயற்பியல் 244, வேதியியல் 222, தாவரவியல் 204, விலங்கியல் 197, வரலாறு 170, புவியியல் 24, பொருளாதாரம் 246, வணிகவியல் 275, பொலிடிக்கல் சயின்ஸ் 4, ஹோம் சயின்ஸ் 5, இந்தியன் கல்ச்சர் 1, உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 - 36, தெலுங்கு 1, உருது 1 உட்பட மொத்தம் 2,895 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

எழுத்து தேர்வு மெயின் பாடத்தில் இருந்து 110 மார்க், எஜூகேஷனல் மெத்தாடலஜி 30, பொது அறிவியல் 10 மார்க் உட்பட மொத்தம் 150 மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியை பொறுத்தவரை 1-3 ஆண்டுகளுக்கு ஒரு மார்க், 3-5 ஆண்டுகளுக்கு 2 மார்க், 5-10 ஆண்டுகளுக்க 3 மார்க், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மார்க் வழங்கப்படும். ஆசிரிய அனுபவத்தை பொறுத்தவரை 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பணி அனுபவம் 1-2 ஆண்டுகளுக்கு ஒரு மார்க், 2-5 ஆண்டுகளுக்கு 2 மார்க், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மார்க் வழங்கப்படும்.
எழுத்து தேர்வு, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றை கணக்கிட்டு பெறும் மார்க்குகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக