கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 1 மார்ச், 2012

முட்புதரில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை நாய்கள் கடித்து குதறியதால் இறந்தது.


கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் அப்பாஜி கார்டன் பகுதியில் ஒரு முட்புதரில் நேற்று மாலை நாய்கள் பலமாக குரைக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது அங்கு முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அதனை நாய்கள் கடித்து குதறியதால் குலையிரும் குற்றுயிருமாக துடித்துக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்து பதை பதைத்து போன அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த குழந்தையை மீட்டனர். அதன்பிறகு உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அது வழியிலேயே இறந்து விட்டது என்று தெரிவித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த கொடூர மனம் படைத்த ஒரு பெண் தான் பெற்ற பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் முட்புதரில் வீசிச்சென்று உள்ளாள். 

முறை தவறிய காதலால் பிறந்ததால் அந்த குழந்தை அதனை முட்புதரில் வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே அந்த பகுதியில் கர்ப்பிணியாக இருந்த பெண்கள் யாராவது குழந்தை பெற்று இருக்கிறார்களா? என்று அப்பகுதியில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக