கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 27 மார்ச், 2012

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்














நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்,பாதுகாப்பான,சீரான குடிநீர் விநியோகம் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.03.2012 அன்று மாலை 5 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சகோ.செய்யது அலி அவர்கள் ஆர்பாட்டத்தை கோஷமிட்டு துவக்கி வைத்தார்.மாநில பேச்சாளர் சகோ.அப்துன் நாஸிர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் தனது உரையில் “கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினால் ஏற்படுகின்ற அவலங்களை எடுத்துரைத்தார். இது போன்ற அவலங்கள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.அல்லாஹ்வின் அருளால் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

ஆர்பாட்டத்தின் இறுதியில் சகோ.ஹாஜா நூஹ் அவர்களின் தலைமையிலான குழுவினர் நகராட்சி மன்றத்திற்கு சென்று ஆர்பாட்ட கோரிக்கைகளை புகாராக ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஆகியோர் இல்லாத காரணத்தால் நகராட்சி மேலாளரிடம் அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக