கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 2 மார்ச், 2012

கடையநல்லூரில் விவசாய சங்க பேரவை கூட்டம்

கடையநல்லூரில் விவசாய சங்க பேரவை கூட்டத்தில் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்றார்.கடையநல்லூரில் வட்டார விவசாய சங்க பேரவை கூட்டம் லட்சுமி சங்கர் இல்லத்தில் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சண்முகவேலு, துணை செயலாளர் சேவியர், விவசாய சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கசமுத்து, விவசாய தொழிலாளர் நலச்சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, சிபிஐ நகர செயலாளர் அயூப்கான், சேக்மைதீன் உட்பட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருப்பாநதி அணைக்கட்டை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வசதி மற்றும் இடுபொருட்களை அரசு தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். உரவிலை உயர்வினை கட்டுப்படுத்தி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பான்கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி கடைமடை வரை பாசன தண்ணீர் தடையின்றி செல்ல வாறுகால் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக