கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 21 மார்ச், 2012

கடையநல்லூரில் 3 நாட்களாக நகை கடை அடைப்பு

கடையநல்லூரில் தங்க நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்திற்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக நகை கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.  கடையநல்லூரில் பெரும்பாலான தங்க நகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரில் வெளிநாட்டு தங்க வியாபாரம் எப்போதுமே நன்றாக இருக்கும். 

வெளிநாட்டு தங்கத்தினை வாங்கிட வருகை தரும் வாடிக்கையாளர்களின் கூட்டமும் அதிகளவில் காணப்படும். தங்க நகைகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு விதிக்கப்பட்டதை கண்டித்து 3 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்து வந்த நிலையில் கடையநல்லூரில் ஒரு சில தங்க நகை கடைகள் திறக்கப்பட்டு வெளிநாட்டு தங்கம் வாங்கிட பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து சென்றதை காண முடிந்தது. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக