கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 29 ஆகஸ்ட், 2012

ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பாஜக தலைவர்


ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பாஜக தலைவர் 
காவிரியாற்றில் மணல் அள்ள தடைகோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த, கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி மீது  புதுப்பாளையம் கிராம மக்கள் .ஆற்றில் குளித்த பெண்களை படமெடுத்ததாக  கரூர் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ்குமாரிடம் மக்கள் புகார் செய்தனர். 
அந்த புகார் மனுவில்,   ‘’கரூர் மாவட்டம் புதுப்பாளையம் காவிரியாற்றில், புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த, 26-ம் தேதி, மதியம், 3 மணிக்கு, கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி உள்பட, 15 பேர் அங்கு வந்து, "உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளோம், புதிய மணல் குவாரி அமைக்க கூடாது' என்று கூறினர்.
பின்னர், காவிரியாற்றில் குளித்து கொண்டிருந்த பெண்களை, சிவசாமி மற்றும் அவருடன் வந்த ஆட்கள் வீடியோ கேமரா மூலம் படமெடுத்தனர். அதை தட்டி கேட்ட எங்களை தகாத வார்தையால் திட்டினர். பிறகு,  அவர்கள் வந்த காரின் கண்ணாடியை, அவர்களே கல்லை எடுத்து உடைத்தனர்.
ஆனால், ஊர்ப்பொதுமக்கள் கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், சிவசாமி பொய்யான புகார் கொடுத்துள்ளார். பெண்களை ஆபாசமாக படம் எடுத்த சின்னசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக