கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 25 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் டாக்டர் சஞ்சீவி இல்லத் திருமண விழா : மணமக்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வாழ்த்தினார்

கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட அதிமுக மருத்துவ அணி தலைவருமான டாக்டர் சஞ்சீவி இல்லத் திருமண விழாவில் மணமக்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வாழ்த்தினார்.கடையநல்லூர் நகராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் சஞ்சீவி - சங்கரேஸ்வரி ஆகியோரது மகன் டாக்டர் பிரின்ஸ்யோகானந்த், கேரள மாநிலம் கொச்சின் போனோத்குமார் ஜெயக்குமார் - சுசீலா ஆகியோரது மகள் டாக்டர் சுமன் ஜெயக்குமார் திருமணம் நடந்தது.

மணமக்களை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், சமூகநல இயக்க தலைவர் ராஜபாளையம் குவைத்ராஜா, ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆறுமுகப்பாண்டியன், ரோட்டரி கவர்னர் தேர்வு ஜேசையா வில்வராயர், அதிமுக மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளரும், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவருமான டாக்டர் சுசீகரன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் ராஜேந்திரன், மெடிக்கல் சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் யாத்ரா பழனி, மாவட்ட பிரதிநிதி பெருமையாபாண்டியன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், முன்னாள் யூனியன் சேர்மன் சொக்கம்பட்டி மாரியப்பன், ரோட்டரி பவர்டீ சேர்மன் அப்துல்காதர் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், அதிமுக நிர்வாகிகள், லயன்ஸ் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் வாழ்த்தினர்.முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி - சங்கரேஸ்வரி, டாக்டர்கள் தேவிகற்பூர நாயகி, புஷ்பலதா மற்றும் தீபா, கபூர் உட்பட பலர் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக