கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் அருகேயுள்ள மெயின்பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாத் தலைவர் சைபுல்லா ஹாஜா ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினார். மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் பேட்டை பகுதியில் அக்ஸா அறக்கட்டளை சார்பில் ரைஸ் மில் திடலில் பஷீர் அஹ்மத் உமரி, பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி, மக்காநகர் ஆயிஷா பள்ளிவாசல் திடலில் மவுலவி அஹ்மத் கபீர் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகிகள் சேகுதுமான், முஹம்மது கோரி, டி.எம்.ஜபருல்லாஹ், அப்துல் குத்தூஸ், அப்துல் மஜீத், கஸ்ஸாலிகோரி, எஸ்.எஸ்.ஜபருல்லாஹ், சேகனா, கலந்தர், இப்ராகிம், பைசல், அப்துல்காதர், அக்பர், பாவா, நூர் முஹம்மத், காஜாமைதீன் செய்திருந்தனர்.
கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக