கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை



ஒவ்வொரு ஆண்டும் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். ஆனால் இந்த ஆண்டு ஜுலை மாதத்திலேயே குற்றால சீசன் தொடங்கியது. இருந்த போதிலும் அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்ததால் சீசன் களை கட்டாமல் இருந்து வந்தது. தற்போது குற்றால சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
 
இந்தநிலையில் கேரளாவில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் கூடுதல் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக குளித்தனர்.
 
இந்தநிலையில் காலை 10 மணியளவில் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக