கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 1 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் அருகே லாரி மோதி பெண் பலி

கடையநல்லூர் அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண் மீது சிமென்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக பலியானார்.

கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜேஸ்வரி (31). நேற்று காலை ராஜேஸ்வரி தனது கணவர் முருகனுடன் வீட்டிலிருந்து தோப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது திருச்சியிலிருந்து கொல்லத்தை நோக்கி சிமென்ட் ஏற்றி வந்த லாரி ராஜேஸ்வரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

லாரியை ஓட்டி வந்த கொல்லம் அச்சுதன்பிள்ளை மகன் சந்தோஷ்குமார் என்பவர் பெண் இறந்து போனதை கண்டு வண்டியை நிறுத்திவிட்டு அதே வழித்தடத்தில் சிமென்ட் ஏற்றி வந்த மற்றொரு லாரியில் ஏறி தப்பி சென்றார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் சொக்கம்பட்டி தனிப்படையை சேர்ந்த போதி, வேல்சாமி ஆகிய இருவரும் லாரியின் பின்னால் சென்று கொடிக்குறிச்சி அருகே மடக்கி டிரைவர் சந்தோஷ்குமாரை பிடித்தனர்.இதுகுறித்து கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக