தமிழகம் முழுவதும் ஈமு கோழி நிறுவனங்கள் செய்துள்ள மோசடி குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் ஈமு பண்ணைகளில் முதலீடு செய்தோருக்கு, பணத்தை திருப்பித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். ஈமு கோழிகளை பராமரிக்க கால்நடைத் துறை மூலம் தீவனம் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈமு பண்ணை மோசடி குறித்த புகார்களில் இதுவரை 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக