கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் பகுதிகளில் 66வது சுதந்திர தினவிழா

கடையநல்லூர் பகுதிகளில் 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நகராட்சி தலைவர் சைபுன்னிசா தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி இன்ஜினியர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சேகர், நகராட்சி துணைத் தலைவர் ராசையா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை யூனியன் தலைவர் பானுமதி ஏற்றி வைத்தார். பிடிஓ மோகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் தேசிய கொடியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஏற்றி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் கல்வி சரகம் திரிகூடபுரம் இந்து நடுநிலைப் பள்ளியில் தேசிய கொடியை பஞ்., தலைவி முத்துசெல்வி (எ) பூங்கொடி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை ஜெயசந்திரா, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்.,தலைவர் முருகேசன், ஆசிரியர்கள் செண்பகஅருணாசலம், முருகையா, முத்துராமன், வெளியப்பசாமி, ஆசிரியைகள், கனகவல்லி, நிர்மலாதேவி, ராணி, வைகுண்டராமலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை பள்ளி முதல்வரும் தாளாளருமான டாக்டர் ராஜாமுத்துக்குமார் ஏற்றி வைத்தார். பள்ளி தமிழாசிரியர் இசக்கிமுத்து சுதந்திர தின சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி துணை முதல்வர் முத்துகிருஷ்ணவேணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக