கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

கடையநல்லூரில் முயல் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  
 கடையநல்லூர் ரயில்வே கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையநல்லூர் வனச்சரகர் வெள்ளத்துரை தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாய் மூலம் முயல் வேட்டையில் ஈடுபட்ட மாவடிக்காலை சேர்ந்த ராமகிருஷ்ணன் (20), மகாலிங்கம் (26), ரகுமான் (18) ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுதொடர்பாக மாவடிக்காலை சேர்ந்த 4 பேரை தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக