கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் வசிக்கும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்:



அறுபது வயதை கடந்து வாழ்வதே அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் 100 வயதை கடந்த முதியவர் திடகாத்திரமாக வாழ்ந்து வருகிறார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த அவரது பெயர் சுப்பையாநாயுடு. 15-8-1912-ந்தேதி பிறந்த இவர் இந்த மாதம் 100 வயதை கடந்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 
காசிதர்மம் ஜில்லா போர்டு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த இவர் 1971-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 40 ஆண்டுகளாக பென்சன் பெற்று வருகிறார். யாருடைய துணையும் இல்லாமல் தனது தேவைகளை தானே செய்து வருகிறார். தினமும் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருகிறார்.
 
பேரன், பேத்திகளோடு இன்பமாக வாழ்க்கை நடத்தி வரும் அவர் கூறியதாவது:-
 
திடகாத்திரமாய் இருக்கும் எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. 101 வயதின் துவக்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தினமும் நடைபயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக