கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


கடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நபிகள் நாயகத்தை அவமதித்து சித்தரித்து படம் தயாரித்துள்ள அமெரிக்க திரைப்பட இயக்குநர் மற்றும் அதற்கு துணைபோன அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடையநல்லூர் மணிக்கூட்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் சங்கை ஜாபர்அலி உஸ்மானி கண்டன உரையாற்றினார். பாப்புலர் ப்ரண்ட் கடையநல்லூர் நகர செயலாளர் முகம்மதுகனி நன்றி கூறினார். கண்டன கோஷங்கள் எழுப்பபட்டடது.
ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக